உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை நெடுஞ்சாலைகளில் கொடி கம்பங்கள் அதிகரிப்பு

செங்கை நெடுஞ்சாலைகளில் கொடி கம்பங்கள் அதிகரிப்பு

செங்கல்பட்டு : செங்கை மற்றும் புறநகர் பகுதிகளான சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில், பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜாதி சங்கங்களின் கட்சிக் கொடிகள், பெரிய பெரிய ராட்சத இரும்புக் கம்பங்களில் வைக்கப்பட்டு உள்ளன.கொடிகள், கம்பங்களை யார் பெரிய அளவில் வைக்கின்றனர் என, போட்டி போட்டுக்கொண்டு, ஒரு கட்சியை விட மற்றொரு கட்சி பெரிதாக உயரமான இரும்புக் கம்பம் கொண்டு, கொடி ஏற்றி வருகின்றனர்.லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலையோரம், வண்ண வண்ண கொடிகள் உள்ளது, வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.வாகன ஓட்டிகள், தங்கள் அபிமான கட்சியின் கொடிகளை பார்த்த வண்ணம் செல்லும் போது, அவர்கள் விபத்தில் சிக்க அதிக அளவு வாய்ப்பு உள்ளது.பெரும்பாலான கட்சியினர், நெடுஞ்சாலைத் துறையிடமோ மாவட்ட நிர்வாகத்திடமோ உரிய அனுமதி பெறாமல், பல இடங்களில் தங்களின் கட்சிக் கொடிகளை ஏற்றி வருகின்றனர்.ஒவ்வொரு கம்பமும், 10 அடி உயரம் முதல் 50 அடி உயரம் வரை நடப்பட்டு வருகிறது. எனவே, விபத்து ஏற்படுத்தும் வகையில், அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கட்சி கொடிக் கம்பங்களை உடனடியாக அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை