ரயில்வே கேட்டில் மோதிய லாரி ஒரு மணி நேரம் சேவை பாதிப்பு
காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, நேற்று காலை 7:00 மணிக்கு, ஏனாத்துார் ரயில்வே கடவு பாதை 28ஐ கடந்து செல்ல முயன்றது.அப்போது, அருகில் உள்ள கேட் மீது மோதியது. இதில், ரயில்வே கேட் தடுப்பு கம்பி மேலே சென்று, மின் கம்பி மீது உரசியது.இதனால், சாலையில் தீப்பொறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, செங்கல்பட்டு மார்க்கமாக, 8:15க்கு சென்னை செல்லும் மின்சார ரயில், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது.ரயில்வே கேட் சரிசெய்யப்பட்ட பின், ஒரு மணி நேரம் கழித்து, புதிய ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. விபத்து ஏற்படுத்திய லாரியை, ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.