உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 தானியங்கி மழைமானிகள் மழைக்காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 தானியங்கி மழைமானிகள் மழைக்காலத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டம்

செங்கல்பட்டு:தமிழகத்தில், மழைப்பொழிவு மற்றும் வானிலை நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்வது தொடர்பாக, தமிழகம் முழுதும், 1,400 தானியங்கி மழைமானிகள் மற்றும் 100 தானியங்கி வானிலை நிலையம் அமைக்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம், பணிகள் நடந்துவருகின்றன.செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலக வளாகம் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில், திறந்தவெளி பகுதியில், தானியங்கி மழைமானிகள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைப்பதற்கான இடத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்வு செய்து, பேரிடர் மேலாண்மைத் துறையிடம் ஒப்படைத்தனர்.தேர்வு செய்யப்பட்ட இடங்களில், முதல் கட்டமாக தானியங்கி மழைமானிகளை சோலாருடன் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன்மூலம், மழையின் அளவு துல்லியமாக கணக்கீடு செய்யப்படும். இதனுடனான தகவல் தொடர்பு, பேரிடர் மீட்புத் துறை அலுவலகத்தில் இணைக்கப்படும். இங்கிருந்து, மாவட்டத்தின் மழை அளவு குறித்து தெரிந்து கொள்ளலாம்.திருப்போரூர் தாலுகாவில் கேளம்பாக்கத்திலும், செய்யூர் தாலுகாவில் லத்துாரிலும், தலா ஒரு தானியங்கி வானிலை நிலையம் அமைக்கும் பணி துவக்கப்பட உள்ளது.இப்பணிகள் அனைத்தையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.மாவட்டத்தில், 30 இடங்களில் தானியங்கி மழைமானிகள், இரண்டு இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள், மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, மழைக்காலங்களில் பயன்பாட்டிற்கு வரும்.--அருண்ராஜ்,கலெக்டர், செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை