உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எல்லையம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

எல்லையம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே குமணன்சாவடியில், பழமை வாய்ந்த ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் மூன்றாம் வாரம் தீமிதி விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.இந்தாண்டு தீமிதி விழா, கடந்த 26ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் ஒரு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவின் 10ம் நாளான நேற்று தீமிதி திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீமிதித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பூவை.எம்.ஞானம் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர். ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய குழு தலைவர் ஜெயக்குமார், பூவை.எம்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை