உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியை காட்டி மிரட்டி ரூ.13.5 லட்சம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி ரூ.13.5 லட்சம் பறிப்பு

எஸ்பிளனேடு, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி, வடிவுடையம்மன் தெருவைச் சேர்ந்த நண்பர்கள் சுலைமான், 57; முகமது ஆரிப், 57. இருவரும் பெரியமேட்டில் தோல் பொருள் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சுலைமான் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு பொருட்கள் வாங்குவதற்காக, நேற்று முன்தினம் இரவு 13.5 லட்சம் ரூபாயுடன், டூ - வீலரில் இருவரும் சென்றனர். கோட்டை ரயில் நிலையம் அருகே, இரண்டு டூ - வீலர்களில் பின்தொடர்ந்து வந்த நான்கு பேர், சுலைமான் மற்றும் முகமது ஆரிபை கத்தி முனையில் மிரட்டி, 13.5 லட்சம் ரூபாயை பறித்து தப்பினர். வியாபாரிகள் இருவரும் அளித்த புகாரின்படி, எஸ்பிளனேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ