உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தவறி விழுந்த தொழிலாளி பலி

தவறி விழுந்த தொழிலாளி பலி

கொடுங்கையூர், பழைய வண்ணாரப்பேட்டை, இரட்டைகுழி தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 40; கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. ஆறு ஆண்டுகளாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.கடந்த 30ம் தேதி, எருக்கஞ்சேரி, எத்திராஜ் சாமி சாலை, டான் போஸ்கோ பள்ளியில், 'ஷீட்' அமைக்கும் வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில், தலையில் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று உயிரிழந்தார். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mohan
மே 08, 2024 07:38

உயரத்தில் வேலை செய்பவர்கள் நல்ல உடல் நிலை மற்றும் மனநிலையில் உள்ளவர்களாக இருத்தல் அவசியம் அவ்வாறு இருப்பவர்களை மட்டமே பணியமர்த்த வேண்டும் இந்த வேலைகளை செய்ய குறிப்பிட்ட அனுபவமும், தொழில் திறமை கொண்டுள்ள பணியாளர்களை அடையாளம் கண்டு ஒரு குழு அமைக்க கட்டிட வேலையை மேற்கொள்ளும் பொறியாளர்கள் சஙகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போது தான் உயரத்தில் உள்ள வேலைளை செய்வதற்கு தேவையான பாதுகாப்பு முறைகளையும், அதன் உபகரணங்களையும் உபகரணங்களையும் வாங்கி பயன் படுத்த இயலும் நான் அறிந்த வரை இரண்டு மாடிகளும் அதற்குமேல் உள்ள கட்டிடங்களும் வேலை செய்பவர்கள், பயந்து பயந்து தான் செய்கின்றனர் பொறியாளர் சங்கம் இதனை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் சில பெரிய பொறியாளர்கள் இன்சூரன்ஸ் செய்கின்றனர் அது உயிரைக்காக்காது


மேலும் செய்திகள்











புதிய வீடியோ