உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தி.மு.க., -- எம்.எல்.ஏ., மீது ரூ.1 கோடி மோசடி புகார்

தி.மு.க., -- எம்.எல்.ஏ., மீது ரூ.1 கோடி மோசடி புகார்

சென்னை, நாமக்கல் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் இவரது நண்பர் ஆகியோர், 1 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டதாக தொழிலதிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் கலைச்செல்வன்; தொழில் அதிபர். இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்:நான் 'விராட் டிஸ்டிலரீஸ்' எனும் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னிடம், நாமக்கல் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராமலிங்கம் மற்றும் இவரது நண்பர் செந்தில்குமார் ஆகியோர், என் தொழிலை விரிவுப்படுத்தி தருவதாகவும், அரசு நிறுவனங்களுக்கு குடிநீர் வாங்க, 'ஆர்டர்' பிடித்து தருவதாகவும், இரு தவணைகளில் 1 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்துவிட்டனர். இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி