உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா வியாபாரிகள் 28 பேர் சிக்கினர்

கஞ்சா வியாபாரிகள் 28 பேர் சிக்கினர்

சென்னை,சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை, போலீசார் கைது செய்து வருகின்றனர்.அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், போதை வஸ்துக்கள் விற்பனையில் ஈடுபட்ட, 28 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் இருந்து, 43.6 கிலோ கஞ்சா, 2.4 கிலோ கிராம் மெத்தம்பெட்டமைன், 1,453 உடல் வலி நிவாரண மாத்திரைகள், ஒன்பது மொபைல் போன்கள், 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி