உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் ஆட்டை

அரசு ஊழியர் வீட்டில் 5 சவரன் ஆட்டை

குன்றத்துார்:தாம்பரம் அருகே படப்பை அடுத்த காவனுார் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர், 35; கால்நடை துறை ஊழியர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்தினருடன் வீட்டில் துாங்கினார். காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் பக்கத்து அறையில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 5 சவரன் நகை, 10,000 ரூபாய், வெள்ளி கொலுசு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.இதுகுறித்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்