உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 54 கிலோ கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்

54 கிலோ கஞ்சா தாம்பரத்தில் பறிமுதல்

தாம்பரம், தாம்பரம் பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த ஒடிசாவைச் சேர்ந்த சரோஜ்குமார் பர்தன், 42,சைலேஸ் கனுாரி, 63, அசாமைச் சேர்ந்த அமிதவா தாஸ், 30, ஆகிய மூவரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனையிட்டதில், 5.35 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 53.5 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில், ஒடிசாவின், மல்கான்கிரி என்ற இடத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பது தெரியவந்தது. மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை