உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டி காலை உடைத்த வீட்டு பணிப்பெண் கைது

மூதாட்டி காலை உடைத்த வீட்டு பணிப்பெண் கைது

நொளம்பூர்,முகப்பேர் மேற்கு, கங்கையம்மன் நகரைச் சேர்ந்தவர் ராசாத்தி, 85. இவர், அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார்.இவரை கவனித்துக் கொள்ள, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரைச் சேர்ந்த மரியா, 60, என்ற பெண், ஒரு மாதத்திற்கு முன் பணியமர்த்தப்பட்டார்.இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், நேற்று முன்தினம் மாலை ராசாத்தியின் காலில் எண்ணெய் போடும்போது, ராசாத்தி மரியாவை திட்டியதாகக் கூறப்படுகிறது.இதனால், ஆத்திரமடைந்த மரியா, ராசாத்தியின் காலை உடைத்தார். இதையடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மரியாவை கைது செய்து நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை