உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீரில் மூழ்கி மாணவர் பலி

நீரில் மூழ்கி மாணவர் பலி

கூடுவாஞ்சேரி. காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் சுபாஷ் சந்திர போஸ் தெருவைச் சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங் டேனியல் மகன் மோசஸ் ஜோஸ்வா, 17. தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 1 மாணவர்.நண்பர்களான தினேஷ்குமார், ஹரிஹரன், நித்யானந்தம், அஸ்வின், ஹரிஹரன், டென்ஸ்சன் ஆகிய ஆறு பேருடன் சேர்ந்து, ஊரப்பாக்கம் ராம் நகர் பகுதியில், உள்ள விவசாய கிணற்றில், மாலை 6:00 மணி அளவில் குளித்தார்.அப்போது, மோசஸ் ஜோஸ்வாவுக்கு நீச்சல் தெரியாததால், கிணற்று நீரில் மூழ்கினார்.தகவலறிந்து வந்த மறைமலை நகர் தீயணைப்பு துறை, மீட்பு படையினர், கிணற்றில் இருந்து மோசஸ் சடலத்தை கைப்பற்றினர். கூடுவாஞ்சேரி மற்றும் கிளாம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ