உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்குவரத்து அமைச்சருக்கு கோரிக்கை

போக்குவரத்து அமைச்சருக்கு கோரிக்கை

ஆனைமலை : பஸ்களில் புறப்படும் நேரத்தினை குறிப்பிட போக்குவரத்து அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆனைமலை காந்தி ஆசிரம நிர்வாக அறங்காவலர் ரங்கநாதன் போக்குவரத்து துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு:பஸ் ஸ்டாண்ட்களில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல பல பஸ்கள் நிற்கின்றன. இவற்றில் எந்த பஸ் எந்த நேரத்தில் புறப்படும் என்ற விபரம் பயணிகளுக்கு தெரிவதில்லை.பயணிகள் நலன் கருதி ஒவ்வொரு பஸ்சின் முன்புறமும், பின்புறத்திலும் எலக்ட்ரானிக் டிஸ்பிளே மூலம் பஸ்கள் புறப்படும் நேரத்தையும், முக்கிய இடங்களின் தூரத்தையும் தெரிவிக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை