உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

60 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில் நல்லுார் பஸ் ஸ்டாப் அருகே, மேற்கு போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனர்.அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி வெள்ளாளபாளையத்தை சேர்ந்த சப்பானிமுத்து,30, கிணத்துக்கடவு சூலக்கலை சேர்ந்த வர்கீஸ்ராஜ்,36 ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து, 60 கிலோ புகையிலை பொருட்களையும், சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை