உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்து விட்டது மழைப்பொழிவு 41 அடியானது சிறுவாணி நீர்மட்டம்

குறைந்து விட்டது மழைப்பொழிவு 41 அடியானது சிறுவாணி நீர்மட்டம்

கோவை:குறைந்தளவு மழையின் காரணமாக, சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்ந்து, 41 அடி அளவில் இருந்து வருகிறது.கோவையின் முக்கிய நீராதாரங்களுள் ஒன்று சிறுவாணி அணை. பாதுகாப்பு காரணங்களுக்காக அணையின் முழுக்கொள்ளளவான, 50 அடி நீரை தேக்காமல், 45 அடி மட்டுமே தேக்கி வருகிறது கேரள நீர்பாசனத் துறை. ஆனால், கடந்த மாதம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், மழை அதிகம் பொழிந்த போதும், நீர்மட்டத்தை, 45 அடி அளவுக்கு கூட, உயர விடாமல் கேரள நீர்பாசனத்துறை அதிகாரிகள் நீரை திறந்து விடுகின்றனர்.கடந்த சில தினங்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இறங்குமுகத்திலேயே உள்ளது. அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அடிவாரத்தில் மழைப்பொழிவு இல்லை. அணைப்பகுதியில், 5 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. அணையின் நீர்மட்டம், 41.62 அடியாக இருந்தது. அணையில் இருந்து 10.783 கோடி லிட்டர் நீர் குடிநீருக்காக எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை