-- நமது நிருபர் -திருப்பூரில் நடந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டியில், மாணவ, மாணவியர் உட்பட, 253 பேர் ஆர்வமுடன் பங்கேற்று, விளையாடினர்.விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில், அவ்வப்போது, விளையாட்டுத்துறை, கல்வித்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த போட்டிகளில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.இந்நிலையில், மாவட்ட சதுரங்க அசோசியேஷன், பாரதி செஸ் அகாடமி சார்பில், சசூரி டிராபிக்கான மாவட்ட சதுரங்க போட்டி, திருப்பூர், மண்ணரை, சசூரி கல்லுாரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.இப்போட்டிகளில், ஒன்பது, 12, 15 மற்றும் பொதுப்பிரிவில், மாவட்டம் முழுதும் இருந்து, 253 பேர், பங்கேற்று, ஆர்வத்துடன் விளையாடினர்.முன்னதாக, கல்லுாரி முதல்வர் மகாலட்சுமி போட்டிகளை துவக்கி வைத்தார். பாரதிராஜா, கோபிகிருஷ்ணன் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாவட்ட சதுரங்க சங்க நிர்வாகிகள் மாணவ, மாணவியருக்கான போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.இது போன்ற போட்டிகளில், மாணவர்கள் அதிகளவில் பங்கேற்று விளையாட வேண்டும்.