உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,

தேர்தல் வெற்றியை கொண்டாடிய தி.மு.க.,

தொண்டாமுத்தூர்:தொண்டாமுத்தூரில், தி.மு.க., பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர் ஈஸ்வரசாமி வெற்றி பெற்றதை, தி.மு.க., பட்டாசு வெடித்தும், ஜமாப் அடித்தும் கொண்டாடினர்.நாடுமுழுவதும் லோக்சபா தேர்தல், 7 கட்டமாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலின், ஓட்டு எண்ணிக்கை, நாடுமுழுவதும் நேற்று நடந்தது. இதில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈஸ்வரசாமி, 2 லட்சத்திற்கும் மேலான ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார்.அனைத்து சுற்று எண்ணிக்கையும் முடிந்ததும், தி.மு.க.,வினர், ஜமாப் அடித்து, ஊர்வலமாக வந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து, மாரியம்மன் கோவில் மைதானத்தில், பட்டாசு வெடித்தும், நடனமாடியும் வெற்றியை கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை