உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக., 30ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

ஆக., 30ல் விவசாயிகள் குறை தீர் கூட்டம்

கோவை;கோவை கலெக்டர் அலுவலக இரண்டாவது தள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், ஆக.,30ல் நடக்கிறது.கோவை மாவட்டத்தில் விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆக., மாத விவசாயிகள் உற்பத்திக்குழு கூட்டம், ஆக., 30 காலை 9.30 மணிக்கும், அதைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமும் நடக்கிறது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் விவசாயிகள் நேரடியாக பங்கேற்று விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். மேலும், விவசாயம் தொடர்பான பிரச்னைகளுக்கு மனுக்களை அளிக்கலாம். என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை