மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
2 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
3 hour(s) ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
3 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
4 hour(s) ago
கோவை;கோவையில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.அதன்படி, இன்று, 2 மி.மீ., நாளை 3 மி.மீ., 3ம் தேதி 2 மி.மீ., மழை பதிவாக வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை, 30--32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 21--22 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்.காலை நேர காற்றின் ஈரப்பதம் 80 சதவீதமும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 50 சதவீதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்று மணிக்கு, 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மழையைப் பயன்படுத்தி, இறவையில் மக்காச்சோளத்தை விதைக்கும் முன் இமிடாகுளோபிரிட் மருந்தை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து, பின் விதைக்கவும்.மக்காச்சோளம் விதைத்த மூன்று நாட்களுக்குள், அட்ரசின் என்ற முளைக்கும் முன் தெளிக்கும் கலைக் கொல்லியை, ஏக்கருக்கு 400 கிராம் அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago