உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்து முன்னணி சார்பில் கோவிலில் உழவாரப்பணி

ஹிந்து முன்னணி சார்பில் கோவிலில் உழவாரப்பணி

வால்பாறை;வால்பாறையில், ஹிந்து முன்னணி சார்பில், கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.வால்பாறை தாலுகா ஹிந்து முன்னணி சார்பில், 32ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, செப்., மாதம் 7ம் தேதி பல்வேறு கோவில்களில், 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.இதன் தொடர்ச்சியாக, வால்பாறையில் உள்ள கோவில்களில் உழவாரப்பணி மேற்கொள்ளும் பணி நேற்று முன்தினம் துவங்கியது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உழவாரப்பணியை, கோவை தெற்கு மாவட்ட துணைத்தலைவர் சேகர் துவக்கி வைத்தார். வால்பாறை நகரத்தலைவர் சதீஸ், பொதுச்செயலாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோவிலை சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி