உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போலீஸ் முடிவு

வாகனங்களுக்கு அபராதம் விதிக்க போலீஸ் முடிவு

வால்பாறை: வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில், சின்கோனா, ேஷக்கல்முடி, முடீஸ், சோலையாறுடேம் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தம் செய்யப்படுகின்றன.இந்நிலையில், பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால், பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் நுழைய முடியாத நிலை உள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள், டூரிஸ்ட் வேன்கள் விதிமுறையை மீறி பஸ் ஸ்டாண்டில் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.போலீசார் கூறுகையில்,'காந்திசிலை பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் விதிமுறையை மீறி வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்கள் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை