உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளத்து கரையை சீரமைக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்

குளத்து கரையை சீரமைக்கணும்: விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை : ஒட்டுக்குளத்தின் கரைகளை வலுப்படுத்தி, கரையிலுள்ள மண்பாதையையும் சீரமைக்க அப்பகுதி விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.உடுமலை ஏழு குள பாசன திட்டத்துக்குட்பட்ட ஒட்டுக்குளம், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. நகரின் அருகில், 90 ஏக்கர் நீர் பரப்பில், இக்குளம் அமைந்துள்ளது.குளத்து கரையிலுள்ள மண்பாதையை அப்பகுதி விவசாயிகளும், சுண்டக்காம்பாளையம் உட்பட கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.மண்பாதை முழுவதும் பராமரிப்பு இல்லாததால், குண்டும், குழியுமாக மாறியுள்ளது.இந்த பாதையை சீரமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக, விவசாயிகள், அப்பகுதி கிராம மக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது குளத்தின் கரை வலுவிழந்து, ஆங்காங்கே சரிந்து வருகிறது.மழை நீரால் கரையில் ஏற்பட்ட மண் அரிப்பால், ஷட்டர்கள் அமைந்துள்ள பகுதியில், கரை குறுகலாக மாறியுள்ளது. சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், சில இடங்களில் குழி ஏற்பட்டு, மண் தொடர்ந்து சரிந்து வருகிறது.இதனால், குளத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவ்வழியாக வாகனங்களும் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.எனவே, பொதுப்பணித்துறையினர், ஒட்டுக்குளத்தின் கரைகளை சீரமைத்து, மண் பாதையையும் மேம்படுத்த வேண்டும் என, அப்பகுதி விவசாயிகளும், கிராம மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி