உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்

புதுச்சேரியில் இருந்து பஸ்சில் புறப்பட்டவரின் பணம் மாயம்

கோவை : புதுச்சேரியில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்ட வாலிபரிடம் இருந்து, ரூ.50 ஆயிரம் திருடிச்சென்றவரை, போலீசார் தேடுகின்றனர்.தேனி மாவட்டம், உத்தமபாளையத்தை சேர்ந்தவர் அஜித்,29. இவர் கடந்த, 10ம் தேதி இரவு, 9:00 மணிக்கு ஒரு லட்சம் ரூபாய் பணத்துடன், புதுச்சேரியில் இருந்து கோவைக்கு தனியார் பஸ்சில் புறப்பட்டுள்ளார். மறுநாள் காலை, 4:45 மணிக்கு காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் வந்தபோது, பணப்பையில் இருந்து ரூ.50 ஆயிரம் காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். காட்டூர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ