உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளநீர் விலையில் மாற்றம் இல்லை

இளநீர் விலையில் மாற்றம் இல்லை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வார விலையே நீடிக்கிறது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம் நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல், 41 ரூபாயாகவே நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு டன் இளநீரின் விலை, 16,500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடந்த 3 மாதமாக நிலவிய கடும் வெயிலின் காரணமாக, இதன் தரம் குறைந்து காணப்படுகிறது. எனவே, தரமான இளநீருக்கு நல்ல விலை கிடைக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ