உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோற்றுத்துறை நாதர் கோவிலில் வரும் 10ல் திருக்கல்யாணம்

சோற்றுத்துறை நாதர் கோவிலில் வரும் 10ல் திருக்கல்யாணம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர், சோற்றுத்துறை நாதர் கோவிலில், வரும், 10ம் தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர், சோற்றுத்துறை நாதர் கோவிலில், வரும் 10ம் தேதி, 12ம் ஆண்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. இதில், காலை 6:00 மணிக்கு, திருமஞ்சன அபிேஷக வழிபாடு நடக்கிறது.காலை, 9:30 மணிக்கு, முளைப்பாலிகை மற்றும் சீர் தட்டம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு, சுவாமிக்கு வேள்வி துவங்குகிறது. காலை 11:00 மணிக்கு, பொற்சுண்ணம் (மஞ்சள்) இடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.காலை, 11:30 மணிக்கு, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு மற்றும் திருமுறை விண்ணப்பம் நடக்கிறது. மதியம், 12:20 மணிக்கு, சோற்றுத்துறை நாதருக்கும், அன்னபூரணி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12:45 மணிக்கு, பொன் ஊஞ்சல் வழிபாடு நடக்கிறது. மதியம், 1:30 மணிக்கு, அன்னம்பாலிப்பு, மாலை, 3:00 மணிக்கு, திருப்புகழ் பண்ணிசை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு, கைலாய வாத்தியத்துடன் திருத்தேர் திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி