உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயணியர் தாகம் போக்க வழியில்லை: குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்துங்க!

பயணியர் தாகம் போக்க வழியில்லை: குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்துங்க!

பொள்ளாச்சி;கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில், குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் பயணியர் அவதிப்படுகின்றனர்.கோவை மற்றும் தென்மாவட்டங்கள் இடையிலான அரசு பஸ்கள், பொள்ளாச்சி மார்க்கமாக இயக்கப்படுகின்றன. இதுதவிர, பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு அதிகப்படியான அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.அவ்வகையில், பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். ஆனால், பயணியருக்கு, சுகாதாரமான தண்ணீர் கிடைக்கும் வகையில் எந்தவொரு வசதியும் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.தற்போது, கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பஸ் ஸ்டாண்ட் வரும் பயணியர் தாகம் தீர்க்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அங்குள்ள கடைகளில், தண்ணீரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.பயணியர் கூறியதாவது:பஸ் ஸ்டாண்டில், கோவை பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில், குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் வரும் தண்ணீர், சுகாதாரமானதாக இருக்குமா என பலரும் சந்தேகிக்கின்றனர்.பஸ் ஸ்டாண்டினுள் எந்த இடத்திலும் சுத்திகரிப்பு கருவி கிடையாது. குழந்தையுடன் வரும் பெண்கள், குடிநீர் இல்லாததால் மிகவும் அவதிப்படுகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மக்கள், தண்ணீர் பாட்டிலை விலை கொடுத்து வாங்க முடியாமல் தாகத்தால் தவிக்கின்றனர். பயணியர் நலன் கருதி, பஸ் ஸ்டாண்டில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி அமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை