உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டூ-வீலர் விபத்தில் மஹா., கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி

டூ-வீலர் விபத்தில் மஹா., கல்லுாரி மாணவர்கள் இருவர் பலி

கிணத்துக்கடவு:கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள, 'மகாராஜா ஹெல்த்கேர்' ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரியில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ருஷிகேஷ் மற்றும் ஜெய் இரண்டாம் ஆண்டு படித்தனர். இருவரும், நேற்று அதிகாலை டீ குடிக்க, பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரிக்கு பைக்கில் சென்றனர்; இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.அங்கிருந்து, கல்லுாரிக்கு திரும்பிய போது, அரசம்பாளையம் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம், இவர்கள் சென்ற பைக் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை