| ADDED : மார் 28, 2024 11:30 PM
கிணத்துக்கடவு:கோவை மாவட்டம், கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் உள்ள, 'மகாராஜா ஹெல்த்கேர்' ஆயுர்வேத மருத்துவக் கல்லுாரியில், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ருஷிகேஷ் மற்றும் ஜெய் இரண்டாம் ஆண்டு படித்தனர். இருவரும், நேற்று அதிகாலை டீ குடிக்க, பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரிக்கு பைக்கில் சென்றனர்; இருவரும் ஹெல்மெட் அணியவில்லை.அங்கிருந்து, கல்லுாரிக்கு திரும்பிய போது, அரசம்பாளையம் பிரிவு அருகே அடையாளம் தெரியாத வாகனம், இவர்கள் சென்ற பைக் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்தனர். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.