| ADDED : நவ 17, 2025 02:01 AM
கோவை: தமிழ்நாடு மாநில செஸ் சங்கம் சார்பில், 36வது ஐ.எம்., நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் செஸ் போட்டி கடந்த, 14ம் தேதி காந்திபுரம், அலங்கார் ஹோட்டலில் துவங்கியது; வரும், 20ம் தேதி நிறைவடைகிறது. இப்போட்டியில் வெளிநாடுகளை சேர்ந்த ஐவர், தமிழகத்தில் மூவர் உட்பட இந்தியாவில் இருந்து ஐவர் என, 10 பேர் விளையாடி வருகின்றனர். நான்காம் சுற்று போட்டிகளின் முடிவில், பெலாரஸ் வீரர் எவ்ஜெனீ போடோல்சென்கோ, 3.5 புள்ளிகளும், கியூபா வீரர் டயாஸ்மனி ஓடெரோ அகோஸ்டா, கோவை வீரர் கிரிமன் ஆகியோர் தலா, 3 புள்ளிகள், சென்னை வீரர் ஹரி கணேஷ், குஜராத்தை சேர்ந்த விவான் விஷால் ஷா ஆகியோர் தலா இரு புள்ளிகள் பெற்றுள்ளனர். கொலம்பியா வீரர் வில்சன் கில்லெர்மோ பாலென்சியா மோராலஸ், பெரு வீரர் கார்லோமக்னோ ஒப்லிடாஸ், அர்ஜென்டினா வீரர் ரவுல் கிளவெரி, விருதுநகர் வீரர் குமரேஷ் ஆகியோர் தலா, 1.5 புள்ளிகளும், மகாராஷ்டிராவின் ஜெய்வீர் மஹேந்திரு, 0.5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.