உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ.83க்கு விற்பனை

விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம்; கிலோ ரூ.83க்கு விற்பனை

உடுமலை : உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை ஏலத்தில், ஒரு கிலோ, ரூ.83 வரை விற்பனை செய்யப்பட்டது.உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் வியாழக்கிழமைகளில், இ - நாம் திட்டத்தின் கீழ், கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. இன்று தைப்பூசம் அரசு விடுமுறை காரணமாக, ஒரு நாள் முன்னதாக, நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. ஏலத்தில், உடுமலை, புக்குளம், பெரியவாளவாடி, சின்ன வாளவாடி, சின்ன வீரம்பட்டி, விளாமரத்துப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 14 விவசாயிகள், 47 மூட்டை கொப்பரை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.இ - நாம் திட்டத்தின் கீழ், 5 நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்றனர்.முதல் தரம், ஒரு கிலோ குறைந்தபட்சமாக, ரூ.77 முதல், அதிகபட்சமாக, ரூ.83 வரையும், இரண்டாம் தரம், குறைந்த பட்சம், ரூ.60.69 முதல், அதிகபட்சமாக, ரூ.73,33 வரை இ - நாம் இணையதளத்தில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, இறுதி செய்யப்பட்டது.ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், விவசாய விளை பொருட்கள் இ - நாம் திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இங்கு நடக்கும் மறைமுக ஏலத்தில், அதிக நிறுவனங்கள் பங்கேற்பதால், கூடுதல் விலை கிடைத்து வருகிறது.மேலும், இடைத்தரகர்கள் இல்லாமல், விளைபொருளுக்குரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. கொள்முதல் செய்யப்படும் கொப்பரைக்கான தொகை, உடனடியாக விவசாயிகள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.எனவே, விவசாயிகள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை