உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனித்தேர்வர்களுக்கு மையங்களில் சான்றிதழ்

தனித்தேர்வர்களுக்கு மையங்களில் சான்றிதழ்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், ஒன்று முதல் மூன்று பாடங்கள் வரை தோல்வி அடைந்த மாணவர்களுக்கு, கடந்த ஜூன் மாத இறுதியில் உடனடி சிறப்பு தேர்வு நடந்தது; பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 401 பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியானது. மாணவர்களுக்கு, தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. பொள்ளாச்சி நேதாஜி சாலை அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையங்களில், வேலை நேரத்தில் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை