உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் 15 ரூபாய்! டிச.1 முதல் பொதுமக்கள் பார்க்க அனுமதி

செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் 15 ரூபாய்! டிச.1 முதல் பொதுமக்கள் பார்க்க அனுமதி

கோவை; கோவையில் நேற்று திறக்கப்பட்ட செம்மொழி பூங்காவை, டிச., 1 முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.ரூ.15 நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனித்துவ அம்சங்களுடன், காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு குழுவினர், லண்டன் சென்று க்யூ பூங்கா மற்றும் சிங்கப்பூரில் உ ள்ள தாவரவியல் பூங்கா, ஷாங்காய் பூங்காக்களை பார்வையிட்டனர். அங்குள்ள செடி, கொடிகள், தாவரங்கள் மற்றும் அவற்றை பராமரிக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகள், வெற்றிகள் மற்றும் தோல்விகளை ஆய்ந்தறிந்து, செம்மொழி பூங்காவில் செயல்படுத்தியுள்ளனர். 23 விதமான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,000 வகையான தாவரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

அரிய வகை மரங்கள்

சங்க காலத்தில் இடம் பெற்றிருந்த அரிய வகை மர வகைகளை அறிந்து, அவற்றை பாதுகாத்து இப்பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. செடி, கொடிகள், தாவரங்கள், அரிய வகை மரங்களை ரசித்துக் கொண்டு, வளைந்து வளைந்து நடந்து செல்லும் வகையில் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாவரவியல், தோட்டக்கலை, கட்டடக்கலை மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அடங்கிய குழுவால் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை வாழ் அரியவகை தாவரங்கள் பாதுகாக்கப்பட்டு, இப்பூங்காவில் வைக்கப்பட்டுள்ளன. தென்அமெரிக்காவில் பெரு, சிலி, பிரேசிலில் காணப்படும் மிளகு மரம் இடம் பெற்றிருக்கிறது. இது எப்போதும் பசுமையுடன் காணப்படும் நறுமண மிக்க மரம். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் கொத்தாக மலர்கள் பூக்கும். செந்துாரம் மரமும் நடப்பட்டு இருக்கிறது. மிகவும் அரிய வகையான கருப்பு அத்தி போன்சாய் மரம் நடவு செய்யப்பட்டிருக்கிறது.

'மேஸ்' விளையாட்டு

கற்றாழைகளிலும் பலவிதங்களை பார்க்கலாம். கற்றாழையின் உச்சியில் பூத்திருக்கும் மலர் மனதை பறிக்கிறது. முழங்கால் அளவுக்கு செடிகள் வளர்க்கப்பட்டு, சிறுவர், சிறுமியர் 'மேஸ்' விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. பேகன், பாரி, காரி, ஆய்ஆண்டிரன், அதியமான், நள்ளி, ஓரி ஆகிய கடையேழு வள்ளல்கள் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. செல்பி பாயின்ட் உண்டு மழை நீரை சேமிக்கும் வகையில், 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான நவீன வசதியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆங்காங்கே செல்பி பாயின் டும் உண்டு. 2.2 கி.மீ., துாரத்துக்கு நடைபயிற்சி மேற்கொள்ளலாம். திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. முதியோர், மாற்றுத்திறனாளிகள் பூங்காவை சுற்றிப்பார்க்கும் வகையில், பேட்டரி வாகன வசதி உள்ளது. 4.2 ஏக்கரில் பார்க்கிங் வசதி வாகனங்கள் நிறுத்த, 4.2 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 453 கார்கள், 1,048 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தலாம். டிச., 1 முதல் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவர். நுழைவு கட்டணம் உண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை