பொள்ளாச்சி;பொள்ளாச்சி ஐயப்ப சுவாமி கோவிலில், வரும், 20ம் தேதி மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது. இதையொட்டி, நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன்படி, நேற்று காலை, 10:00 மணிக்கு, மங்கள இசை, அனுக்ஞை, மஹா கணபதி ஹோமம், தனபூஜை, கிராம சாந்தி நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று, காலை, நவக்கிரக ேஹாமம், மாலை வாஸ்து சாந்தியும், நாளை, காலை, திசா, சாந்தி ேஹாமம், அங்குரார்பணம் நடக்கிறது.இதேபோல, 17ம் தேதி, காலை, மூர்த்தி ஹோமம், சம்ஹிதா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், மாலையில், கடஸ்தாபனம், கலாகர்ஷணம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன.வரும், 18ல் காலை, இரண்டாம் கால யாக பூஜை, 96 வகை திரவியங்களால் ஹோமம், மதியம் ஐயப்ப சுவாமி மஞ்சள் அம்மன், உபசன்னதிகளுக்கு செப்பு கலசம் பொருத்துதல் நடக்கிறது. மாலையில், வேதபாராயணம், மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.வரும் 19ம் தேதி காலை, நான்காம் கால யாக பூஜை, மாலையில் ஐந்தாம் கால யாக பூஜை இரவு, ரக் ஷா பந்தனம், லட்சுமி பூஜைகள் நடக்கின்றன.வரும், 20ம் தேதி காலை, 5:30 மணிக்கு ஆறாம் கால யாக பூஜை, காலை, 8:45 மணிக்கு யாத்ரா கடம் புறப்பாடு நடக்கிறது.காலை, 9:25 மணி முதல், 10:00 மணிக்குள் மஹா கும்பாபிேஷகம், தசதானம், தச தரிசனமும், காலை, 11:00 மணிக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது. மாலையில், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.