உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவிலான போட்டி: ஆஸ்ரம் பள்ளி அசத்தல்

தேசிய அளவிலான போட்டி: ஆஸ்ரம் பள்ளி அசத்தல்

கோவை;தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்று ஆஸ்ரம் பள்ளி மாணவர்கள் அசத்தினர். சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான குவான்-கி-டோ போட்டியில், கோவைப்புதுார் ஆஸ்ரம் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் விக்னேஷ், ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றார். இதேபோல், மாணவர் யஹயா அயாஷ் வாக்கோ இந்தியாவின் சர்வதேச அளவிலான ஓபன் கிக் பாக்சிங் போட்டியில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம், மாணவி ஹாசினி இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் சார்பில் நடந்த, 67வது தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை