| ADDED : பிப் 06, 2024 12:20 AM
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள யுவா பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது.இதில், கோவை மாவட்டத்தில் உள்ள, 14 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இறுதிப் போட்டியில், யுவபாரதி பள்ளி வெற்றி பெற்றது. பரிசளிப்பு நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக கூடலுார் நகராட்சி தலைவர் அறிவரசு பங்கேற்று, போட்டியில் முதல் இடத்தை பிடித்த மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில், யுவா பப்ளிக் பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி, பள்ளியின் அறங்காவலர் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.