கோவை: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், ஐன்ஸ்டீன் பப்ளிக் பள்ளி, ஏ.பி.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் மாணவர்களின் பகுத்தறிவு, சிந்தனையாற்றல் மற்றும் பொது அறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது. மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், 'தினமலர்' சார்பில் இத்தகைய வினாடி-வினா போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி அளவிலான சுற்றில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுகின்றன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு, சிறப்பு பரிசுகள் வழங்கப்படும். ஐன்ஸ்டீன் பப்ளிக் பள்ளி கணபதியில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற, தகுதி சுற்றில் 60 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'ஏ' அணி வெற்றி பெற்றது. அந்த அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் ரக் ஷன் பீட்டர் மற்றும் ஏழாம் வகுப்பு மாணவி தக் ஷதா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் பிரீத்தி, இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். ஏ.பி.சி., மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆவாரம்பாளையத்தில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற, தகுதி சுற்றில் 115 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில், 'எச்' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், ஸ்ரீ வர்ஷா மற்றும் முகமது ஹம்தானு ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் ஜனதாம்பிகை இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப்பள்ளி பீளமேட்டில் உள்ள இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில், 270 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அதிக மதிப்பெண் பெற்ற 16 மாணவ-மாணவிகள் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் 'பி' அணி முதலிடம் பெற்றது. அந்த அணியை சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் தர்னீஷ் மற்றும் மனோகர் ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இருவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் சசிகுமார், இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். கிப்ட் ஸ்பான்சர்கள் 'தினமலர்' நாளிதழுடன் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன.