உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  இ - பாஸ் இல்லாமல் வரும் சுற்றுலா வாகனங்களால் அவதி

 இ - பாஸ் இல்லாமல் வரும் சுற்றுலா வாகனங்களால் அவதி

மேட்டுப்பாளையம்: -: நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு செல்ல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், மேட்டுப்பாளையம் கல்லாறு இ--பாஸ் சோதனைச் சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இ--பாஸ் சோதனைச் சாவடி ஊழியர்கள் கூறுகையில், 'கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் கூட, இ--பாஸ் பதிவு செய்து வருகின்றன. ஆனால் கோவை, திருப்பூர், ஈரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பலவும் இ--பாஸ் இன்றி வருகின்றன. அவர்களிடம் கேட்டால், நாங்கள் லோக்கல்; ஏன் இ--பாஸ் எடுக்க வேண்டும் என கேட்கின்றனர். இதனால் அவர்களுக்கு இ--பாஸ் பதிவு செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சோதனைச்சாவடியில் 'பூம் பேரியர்' அமைக்கப்பட்டு, வாகனங்கள் தானியங்கி முறையில் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை