உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பச்சிளங்குழந்தை மீட்பு உரிமை கோருபவர் யார்?

 பச்சிளங்குழந்தை மீட்பு உரிமை கோருபவர் யார்?

அரசு மருத்துவமனையில் கைவிடபட்ட நிலையிலுள்ள 31 நாட்கள் பெண் குழந்தையை, உரிமை கோருபவர்கள் உரிய ஆவணங்களுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த மருத்துவமனையில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட, 31 நாட்களான பெண் குழந்தை, குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு உரிமை கோருபவர்கள், உரிய ஆவணங்களுடன், 30 நாட்களுக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், 7வது தளம், கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியை (தொடர்பு எண்: 0421 2971198) தொடர்பு கொள்ளலாம். யாரும் தொடர்புகொள்ளாவிடில், குழந்தைக்கு பெற்றோர் இல்லை என்று கருதி, சட்டப்படி தத்து வழங்கப்படுமென, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. - நமது நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ