உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேன் மோதி மகன் பலி: தந்தை படுகாயம்

வேன் மோதி மகன் பலி: தந்தை படுகாயம்

கடலூர் : பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் சிறுவன் இறந்தான். தந்தை படுகாயமடைந்தார்.பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜிவ்காந்தி, 30. இவர் கடந்த 14ம் தேதி இரவு தனது மகன் சூரியபிரசாத், 4, அழைத்துக் கொண்டு தனது மோட்டார் பைக்கில் பண்ருட்டியில் இருந்த சேமக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்தார். அங்குசெட்டிப்பாளையம் அருகே சென்றபோது பின்னால் வந்த வேன், பைக் மீது மோதியது.உடன் படுகாயமடைந்த ராஜிவ்காந்தி, அவரது மகன் சூரியபிரசாத் ஆகியோர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சிறுவன் ‹ரியபிரசாரத்தை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தான்.இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை