| ADDED : ஆக 16, 2024 11:25 PM
கடலுார்: கடலுார் துறைமுகம் செல்லியம்மன் கோவி லில் 108 பால்குடம் ஊர்வலம் மற்றும் செடல் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோ பூஜை மற் றும் நவகலச ேஹாமம் நடந்தது. 7:00 மணிக்கு முதுநகர் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள ஆனந்த விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் புறப்பாடு நடந்தது.தொடர்ந்து, 7:30 மணிக்கு நவக்கிரக பூஜைகள், 10:00 மணிக்கு 108 பால்குட அபிேஷகமும், மதியம் 12:00 மணிக்கு செடல் திருவிழா, தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நாளை 18ம் தேதி மாலை 6:00 மணிக்கு பாவாடைராயனுக்கு கும்பம் கொட்டிப்படைத்தல் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.