உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர் கொலை வழக்கில் 3 பேர் கைது

அ.தி.மு.க., மாஜி கவுன்சிலர் கொலை வழக்கில் 3 பேர் கைது

கடலுார்: கடலுாரில் அ.தி.மு.க., 'மாஜி' கவுன்சிலர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், பழைய வண்டிப்பாளையம் ஆலை காலனியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன்,45; அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி. நகராட்சி முன்னாள் கவுன்சிலரான இவர், நேற்று முன்தினம் இரவு புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெரு வழியாக பைக்கில் சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம கும்பல், புஷ்பநாதனை வழிமறித்து, சரமாரியாக வெட்டி கொலை செய்தது.முகம் சிதைக்கப்பட்ட நிலையில், அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அனுப்பினர்.இதற்கிடையே, புஷ்பநாதன் உடல் கடலுார் அரசு மருத்துவமனையில் இருப்பதாக நினைத்து, அவரது உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க., வினர் அங்கு திரண்டனர். பின், கொலை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, அரசு மருத்துவமனை எதிரில் சாலை மறியல் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.கொலை சம்பவம் குறித்து கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆலை காலனியைச் சேர்ந்த அஜய்,21; நேதாஜி,23; பாலன் காலனியைச் சேர்ந்த சந்தோஷ்,24; ஆகியோரை கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆடுகள் வாங்கி விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிய வந்தது.போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்ட அஜய், நேதாஜி வீடுகளை, புஷ்பநாதன் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர்.இச்சம்பவம் தொடர்பாக வண்டிப்பாளையம் பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ