உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி., சுரங்கத்தில் விபத்து இயந்திரத்தில் சிக்கியவர் பலி

என்.எல்.சி., சுரங்கத்தில் விபத்து இயந்திரத்தில் சிக்கியவர் பலி

நெய்வேலி:கடலுார் மாவட்டம், வடலுார் வள்ளலார் நகரில் வசித்தவர் குழந்தைவேலு, 39, நெய்வேலி என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளி. இவருக்கு, 32 வயதில் மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வேலைக்கு சென்றவர் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு பணியிடத்தில் இறந்து கிடந்தார்.அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அங்கிருந்த இயந்திரத்தில் சிக்கி அவர் இறந்தது தெரிந்தது. இதையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குழந்தைவேலுவின் மனைவி மற்றும் உறவினர்கள், உடலை வாங்க மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.என்.எல்.சி., சுரங்கங்களின் மனிதவளத் துறை துணை பொது மேலாளர் மற்றும் அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்தினர். இறந்தவர் மனைவிக்கு என்.எல்.சி.,யில் நிரந்தர வேலை மற்றும் 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க என்.எல்.சி., நிர்வாகம் முன்வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை