உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருதையில் அடையாளம் தெரியாத முதியவர் சாவு

விருதையில் அடையாளம் தெரியாத முதியவர் சாவு

விருத்தாசலம்: விருத்தாசலம் பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் பஸ் நிலையத்தில் நேற்று மாலை, 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். தகவலின் பேரில், விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். இறந்துபோன முதியவர் வெள்ளை நிற கோடு போட்ட சட்டை அணிந்திருந்தார்.இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, முதியவர் யார், எந்த ஊரைச் சேரந்தவர் என, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !