உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரூ.7 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது

ரூ.7 லட்சம் வாங்கி ஏமாற்றியவர் கைது

சிதம்பரம் : நிலம் வாங்கி தருவதாக கூறி, பெண்ணிடம் ரூ. 7 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்தனர்.சிதம்பரம், மின் நகரை சேர்ந்தவர் டெய்சி, 47; இவரிடம், பூலாமேடு கீழ்தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பழனிவேல்,40; என்பவர், கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ. 7 லட்சம் பணம் வாங்கினார். ஆனால், நிலமும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வந்தார். இதுகுறித்து டெய்சி கொடுத்த புகாரில், சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை