உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வாலிபர்கள் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

வாலிபர்கள் மீது தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வாலிபர்கள் இருவரை தாக்கிய ஐவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விருத்தாசலம் ஆலடி ரோடு சக்தி நகரைச் சேர்ந்தவர் சவுந்திரராஜன், 28. இவர் கடந்த 28ம் தேதி எம்.ஆர்.கே., நகரில் தனது நண்பர் வீரமணி என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நாச்சியார்பேட்டையை சேர்ந்த பூமாலை மகன் அருண்குமார், 27, ஆதரவாளர்கள் முகமது ரியாஸ், 24, அகத்தியன், மதியழன், தங்கதுரை மகன் அருண்குமார் ஆகியோர், எங்க ஏரியா பையனை யார் அடித்தது என கேட்டு, சவுந்திரராஜன், வீரமணியை சரமாரியாக தாக்கினர்.புகாரின்பேரில், விருத்தாசலம் போலீசார் அருண்குமார், முகமது ரியாஸ் உள்ளிட்ட ஐவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை