| ADDED : மே 22, 2024 12:53 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த பரவளூரில் தேனீக்கள் வளர்ப்பு குறித்து வேளாண் மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இறுதியாண்டு மாணவர்கள், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர்.அவர்கள், விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராம விவசாயிகளுக்கு, தேனீக்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி அளித்தனர். சுபல், சுடலையாண்டி, சாமிநாதன், திருமாவளவன், வேந்தன், விஜயராகவன், விக்ரம், விஷ்ணு சங்கர், விஷ்ணு பாண்டி ஆகியோர் தேனீக்களின் நன்மைகள், வளர்ப்பு, பராமரிப்பு குறித்து பயிற்சியளித்தனர்.