உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு

மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு

சிதம்பரம் : சிதம்பரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சிதம்பரம் அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தில், சாலை பணி நிறுத்தியதை கண்டித்து அப்பகுதியினர் நேற்று முன்தினம், சிதம்பரம் - காட்டுமன்னார்கோவில் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சிதம்பரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.இந்நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மறியலில் ஈடுபட்டதாக, துணிசரமேடு பகுதியை சேர்ந்த முகிலன் ,40; பாக்யராஜ், 42; உதயகுமார்,55; சபரிராஜன், 28; பிரேம், 29; சுதா, 50; ஆகிய 6 பேர் மீது, சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை