உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பாட்டியை தாக்கிய பேரன் மீது வழக்கு

பாட்டியை தாக்கிய பேரன் மீது வழக்கு

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் பாட்டியை தாக்கி பேரன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நடுவீரப்பட்டு தெற்குதெருவை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி ராசாம்பாள்,80;அதே பகுதியை சேர்ந்த இவரது பேரன் வேல்முருகன்.இவர் தமது பாட்டியின் பெயரில் உள்ள வீட்டு மனையை தமது பெயருக்கு எழுதி கொடுக்குமாறு கேட்டு வந்தார்.ஆனால் ராசாம்பாள் வீட்டு மனையை மாற்றி கொடுக்காததால் ஆத்திரமடைந்த வேல்முருகன் தமது பாட்டியை ஆபாசமாக திட்டி தாக்கினார்.இதில் பலத்த காயமடைந்த ராசாம்பாள் கடலுார் அரச மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வேல்முருகன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி