உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு

கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க முடிவு

கடலுார், : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கடலுார் மாநகர தி.மு.க., செயற்குழு கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கி பேசினார். பகுதி செயலாளர் நடராஜன், சலீம், இளையராஜா, மாநகர துணை செயலாளர் அகஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக ஐய்யப்பன் எம்.எல்.ஏ., மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி, மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் பேசினார். கூட்டத்தில் கடலுார் மாநகர அனைத்து பகுதிகளிலும் ஜூன் 3ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி அவரது உருவ படத்தை வைத்து மலர் துாவி மரியாதை செலுத்த வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். கடலுார் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணும் இடத்தில் முகவர்கள் தலைமை கழகம் அறிவுறுத்தலின்பேரில் விழிப்புணர்வோடு இருத்தல் வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி கார்த்திக், லெனின், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி