உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

நெல்லிக்குப்பம்: சுந்தரவாண்டி திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டி தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா பிரம்மோற்சவ விழா கடந்த ஏப்., 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் அமன் வீதியுலா நடந்து வந்தது. கடந்த 6ம் தேதி திருக்கல்யாண உற்சவம், 10ம் தேதி சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள கணேஷ் பூசாரி பூங்கரகத்துடன் தீமிதித்தார். தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திகடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி