உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தகொலை

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தகொலை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே மனைவி இறந்த துக்கத்தில் கணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் காமாட்சிபேட்டையை சேர்ந்தவர் கலியபெருமாள்,75; இவரது மனைவி கடந்த ஆண்டு இறந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த கலியபெருமாள், கடந்த 31 ம் தேதி மனைவியின் முதல் நினைவு நாளில் வீட்டில் வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ